-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் வலைகாட்சி TNTJ Web TVநமது இணையதளத்திலும் காணலாம்.
-
நமது வெப்டிவி தற்போது Live WebTV ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4 மணி நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஐபோன் , ஆண்ட்ரா...
-
ஏக இறைவனின் திருப்பெயரால்..... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக மாணவர்களுக்கான கோடைக...
-
கடந்த 19-05-2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனித்து விளங்கும் இஸ்லாம் என சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரைநிகழ்த்...
-
“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங...
TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இமயம் டிவியில்..
இந்தியா 10.30 P.M - 11.00 P.M சவூதி அரேபியா 8.00 P.M – 8.30 P.M யூ.ஏ.இ. 9.00 P.M – 9.30 P.M
- வெள்ளிமேடை பயான்கள்!
- மாநாட்டு உரைகள்
- இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும்
Downlink details for Imayam TV
in Gulf: Satellite: IS 17 Position: 66 deg East Downlink Freq: 4015 MHz Symbol rate : 30.000 MSPS Fec:3/4 Polarisation:Vertical Signal:MPEG-4 Modulation: DVB-S2 /8PSK
in India: Statelite – Thaicom 5 Downlink Frequency – 3991 Symbol Rate – 13330 FEC – 3/4 Polarization – Vertical
17-May-2013
கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு
09-May-2013
மெகா 24 தொலைக்காட்சியில் டிஎன்டிஜேயின் நிகழ்ச்சிகள்! இன்ஷா அல்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய சகோதரர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடமிருந்தும் நிகழ்ச்சியை வேறு சேனலில் ஒளிபரப்பச் சொல்லி கோரிக்கைகள் வந்தன.
அந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, வரக்கூடிய மே 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24 தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை மாவட்ட கிளை நிர்வாகிகள் துண்டுபிரசுரங்கள், பொதுக்கூட்ட அறிவிப்புகள், ஜுமுஆ அறிவிப்புகள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றின் மூலம் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
Source : tntj.net
07-May-2013
என்ன படிக்கலாம் ..? எங்குபடிக்கலாம்....?
ஏகஇறைவனின் திருப்பெயரால்.........
அஸ்ஸலாமுஅலைக்கும்
TNTJ நடத்தும் என்ன படிக்கலாம் ..? எங்குபடிக்கலாம்....? 10 ஆம்வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ. நடைப்பெறவுள்ளது . உங்கள் பி்ளைகளை கலந்து கொள்ள செய்யவும்.
இடம்: தங்கம் மஹால் , இராமநாதபுரம்.
நாள்:18.5.2013
நேரம்:காலை 10 மணிக்கு
அஸ்ஸலாமுஅலைக்கும்
TNTJ நடத்தும் என்ன படிக்கலாம் ..? எங்குபடிக்கலாம்....? 10 ஆம்வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ. நடைப்பெறவுள்ளது . உங்கள் பி்ளைகளை கலந்து கொள்ள செய்யவும்.
இடம்: தங்கம் மஹால் , இராமநாதபுரம்.
நாள்:18.5.2013
நேரம்:காலை 10 மணிக்கு
பர்மா முஸ்லீம்கள் மீது தொடர் தாக்குதல் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்..!
பர்மா முஸ்லீம்கள் மீது தொடர் தாக்குதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.
இந்தியா தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்தியா தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லீம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வண்மையாக கண்டிக்கின்றது.5 சதவீதமே உள்ள முஸ்லீம்களை புத்த மத வெறியர்கள் தொடர்ந்து முஸ்லீம்களை கொலை செய்தும் வீடுகளைவிட்டு விரட்டி அடித்தும் வன்முறை வெறியாட்டங்களை நடத்திவருகின்றன்ர். புத்தர்களுக்கு எதிராக எந்தவித ஆயுதபோராட்டொமோ , வன்முறை செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தாலய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கிறது.
பர்மாவின் அண்டை நாடான இந்தியா இந்த விஷயத்தில் முன்நின்று பாதிக்க பட்ட முஸ்லீம்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், மேலும் முஸ்லீம்கள் பாதிக்கபடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மத்திய அரசை கேட்டு கொள்கின்றது.
இப்படிக்கு
ரஹ்மத்துல்லாஹ்
பொதுச்செயலாளர்
Source : tntj.net
28-Apr-2013
இஸ்லாமியன் என்றால் கொஞ்சம் படியுங்கள்.....
அஸ்ஸலாமுஅலைக்கு வரஹ்
இஸ்லாமிய சமூகத்தில் இன்று இளம்பெண்கள் மாற்று மதத்தவருடன் ஓடி போதல், மணவிலக்கு, குடும்பஉறவுகளில் பிரச்சனை, பெற்றோர்களை புறக்கணித்தல் போன்ற சமூக கேடுகள் அதிகரித்துள்ளது.
ஜமத்தார்களால் பேசி தீர்கப்படவேண்டிய குடும்ப விசயங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் பேசவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.இதற்கு போறுப்பேற்க வேண்டியது இன்றைய இளைய சமூதாயம்.
மார்கத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றோம் . ஊரில் சின்ன பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் நிற்கின்றோம்.ஆனால் தன்னுடைய திருமணவிவகாரங்களில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.இவர்களிடம் ”என்னபாய் கொள்கை எல்லாம் பேசினிங்க இப்ப இப்படி நபிவழிக்கு மாற்றமாக செய்துவிட்டிர்களே என கேட்டால் இந்த மடையர்களின் பதில் இப்படியாக இருக்கும். ”இல்ல பாய் அம்மா செத்து போயிருவேனு மிரட்டுராங்க”.என்பதாக .
கொள்கைக்காக சொந்தங்களையும் பெற்றோர்களையும் இழந்த நபிமார்களின் வரலாற்றுகளை பேசுகின்றோம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்களை பெற்றோர்களை விட்டு வந்ததற்க்காக பராட்டுகிறோம் ஆனால், நாம் அல்லாஹ்விற்க்காக எதையும் இழக்க துணிவதில்லை
பிறகு எப்படி நம்மை தவ்ஹீத்வாதி பரம்பரை இஸ்லாமியன் என அடையாள படுத்த நமக்கு துணிவுவருகிறது இதற்கு நாம் வெட்கப்படவேண்டாம...?
அல்லாஹ் தன்திருமறையில்கூறுகிறான்:
நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள் அதிலிருந்துஏதேனும் ஒன்றை மனமுவந்து அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். அல்குர்ஆன்.4:4
வேதத்தையுடையவர்களே ! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின்வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்.அல்குர்ஆன்.3:71
யார் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நரகத்தில்புகுத்திவிடுவோம் அவர்களின் தோல் கருகிவிடும் போதேல்லாம் அவையல்லா(வேறு) தோல்களை அவர்கள் வேதணையை அனுபவிப்பதற்கென அவர்களுக்கு மாற்றிக்கொண்டெ இருப்போம் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன்.4:56
இஸ்லாமிய சமூகத்தில் பெரும்சீர்கேட்டை உண்டாக்குகின்ற விசயமாக இந்ததிருமணங்கள் அமைந்துவிட்டது என்பதை யாரு மறுக்க முடியாது.
வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியகாலங்களில் வரதச்சணை வாங்ககூடாது என்பதில் உறுதியாக இருக்ககூடியவர்கள்.தாயகம் திரும்பியவுடன் தாயின் சொல்லை தட்டுவதில்லை.இந்த கெடுகெட்டவர்களினால், மார்க்கத்திர்காக இழப்புகளை சந்தித்தவர்களின் தியாகம் கேலியாக்கப்படுகிறது.
இவர்கள் நிலை இப்படியென்றால் ஏகத்துவம் பேசும் பெற்றோர் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது.இவர்களும். மார்க்கத்தை பற்றியும் வரதட்சணை வாங்ககூடாது என்பது பற்றியும் வாய்கிழிய பேசிவிட்டு தங்கள் பெண்பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க நினைத்துவிட்டால் கொள்கைகள் குப்பைக்கு போய்விடும்.இவர்களிடம் கேட்டால் நான் ”கொமராலி“என டயலாக் பதிலாக வரும். இவர்களிடம் நாம் கேட்பதேல்லாம் உங்களுடைய பெண்களை ஒழுக்கமான நல்ல வேலையுள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமுடிக்க வேண்டியதுதானே ஆனால் பணத்தை முக்கியபடுத்தி கொள்கை சிறிதளவும் இல்லாதவர்களுக்கு மணமுடிப்பதில் குறிக்கோளாக அலைந்தால் வரதட்சணை திருமணங்கள் எ்ப்படி நடக்காமல் இருக்கும்.
சரி இவர்கள் தங்கள் மனோ இச்சைப்படி திருமணம் முடிக்கிறார்களே இந்த திருமணங்கள் முழுமையாக வெற்றி பெருகின்றதா என்றால் கிடையாது.இத்திருமணங்களின் முடிவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும இடையில் உறவு விரிசல் இதனால் பெற்றோல் புறக்கணிக்படுதல்.கணவன் மனைவி இருவருக்கிடையே புரிந்தணர்வு ,பரஸ்பர நம்பிக்கை,போன்றவை குறைந்து மணவிலக்கு அதிகரித்துவிட்டது.பொலிஸ் டேஷன் கோட் என அலைதல் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
நபியே நீர் கூறும் ”உங்களுடைய தந்தை மார்களும் உங்களுடைய பிள்ளைகளும்உங்களுடைய சகோதரர்களும் ,உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்கர்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்ப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற வியாபாரமும் ,நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவன்துாதரையும் அவனுடைய வழியில் போர்புரிவதைவிட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால்அல்லாஹ் அவனுடைய கட்டளையை கொண்டுவரும் வரை நீங்கள் எதிர்ப்பார்திருங்கள் அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்துவதில்லை” அல்குர்ஆன்.9:24
எவர் அல்லாஹ்வுக்கும் அவன் துாதருக்கும் மாறுசெய்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நரகநெருப்பு இருக்கிறது. அல்குர்ஆன்.9:63.
மார்கத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு தங்கள் கடைப்பிடிப்பதில் ”நயவஞ்சகம்” புரியும் கேடுகெட்டவர்களை சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்கவேண்டும்.
நீங்கள் வேததை ஓதிக்கொண்டே உங்களை நீங்கள் மறந்துவிட்டு மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா...? அல்குர்ஆன்.2:44
அன்பான சகோதரர்களே உங்கள் உள்ளங்களில் ஈமானை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள்.இதுதான் மார்க்கம் என தெளிவான பிறகும் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறும் கூட்டத்தாரை அல்லாஹ் நேசிப்பதில்லை .அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும் கட்டுப்பட்ட நல்ல முஸ்லிம்களாக மரணிக்க செய்யவேண்டும் என எனக்கும் உங்களுக்கும் பிராத்தித்தவனாக நிறைவு செய்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட பொது குழு
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.4.2013 அன்று இராமநாதபுரம் தக்வா மஜ்த்தில் மாவட்ட பொது குழு கூட்டப்பட்டது .
இதில் பரமகுடி சுலைமான் தலைவராகவும் தொண்டியை சேர்ந்த கலிபுல்லாஹ் அவர்கள் செயலாளராகவும் சித்திக் அவர்கள் பொருளாலராகவும் தேர்ந்கெடுக்கப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

துணைத்தலைவர்.கீழக்கரை நஸ்ரூதீன்
செயலாளர்கள்: மண்டபம் அஜ்மல்
நரிபையூர்.சுலைமான்
பெரியபட்டிணம்.ஜின்னா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.4.2013 அன்று இராமநாதபுரம் தக்வா மஜ்த்தில் மாவட்ட பொது குழு கூட்டப்பட்டது .
இதில் பரமகுடி சுலைமான் தலைவராகவும் தொண்டியை சேர்ந்த கலிபுல்லாஹ் அவர்கள் செயலாளராகவும் சித்திக் அவர்கள் பொருளாலராகவும் தேர்ந்கெடுக்கப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
துணைத்தலைவர்.கீழக்கரை நஸ்ரூதீன்
செயலாளர்கள்: மண்டபம் அஜ்மல்
நரிபையூர்.சுலைமான்
பெரியபட்டிணம்.ஜின்னா
26-Apr-2013
புதுமடத்தில் பரபரப்பாக நடைபெறும் இறைஇல்ல கட்டிட பணிகள்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முகவை மாவட்டம் புதுமடம் கிளையில் பல ஆண்டுகளாக TNTJ கிளை செயல்பட்டு வருகின்றது. தற்போது 5014 சதுர அடியில் பள்ளிவாசல் கட்டுமானப் பணி ரூபாய் 62,00,000.00 மதிப்பில் இறைவனது கிருபையால் சற்று வசுல் செய்த தொகையுடன் கட்டிட வேலையை சகோதரர்கள் துவக்கி உள்ளனர்.
பள்ளிவாசல் கட்டி முடிக்க ரூபாய் 60,05,330.00 தேவைப்படுகின்றது.
தீவிரமாக நடைபெற்றுவரும் கட்டிட வேலைகள் ...
எனவே இறை இல்லத்தை கட்டி முடிக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்து இறைவனிடம் நற்பேரை பெற்றுக் கொள்ளுங்கள்!
நன்கொடை செய்ய விரும்வோர் தங்களது நன்கொடைகளை கிழே உள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பலாம்...TAMILNADU THOWHEED JAMATH
A/C No: 089001000007238
INDIAN OVERSEAS BANK
PUDUMADAM BRANCH
IFSC CODE: IOBA 0000890
நன்கொடைகளை வழங்க விரும்புவோர் மற்றும் மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
- தலைவர் சகோ: முகம்மது ஜலாலுதீன் (+919003449064)
- து.தலைவர் சகோ: பதுருல் இஸ்லாம் (+919841901470)
- செயலாளர் சகோ: பகுருதீன் அலீ (+919789246305)
- பொருளாலர் சகோ: அப்துல் பரீது (+918489029109)
- து.செயலாளர் சகோ: ராஜா உசேன் (+91909516321)
கிளை தொடர்புக்கு : +919042880817
www.pdmtntj.com
masjid@pdmtntj.com
fb.com/pdmtntj
twitter.com/pdmtntj
24-Apr-2013
கோடைக்கால பயிற்ச்சி முகாம்
ஏக இறைவனின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் ...வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நம்முடைய புதுமடம் கிளையின் சார்பாக நடைப்பெற உள்ளது.இதில் உங்கள் 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆண்குழந்தைகளை இப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள செய்து .விடுமுறையை மார்க்கத்தின் பால் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும்.தொழுகை மற்றும் இதர மார்க விசயங்களை அறியதா இங்லீஸ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளது.
சகோதரர்கள் இப்பயிற்சி முகாம் நடத்த பொருளாதர உதவிகளை
அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்






